'யாரையும் விட்டுவைக்க மாட்டோம்'....! - மேற்கு வங்க ரவுடி கும்பல்களுக்கு பிரதமர் மோடி விடுத்த 'கடைசி சான்ஸ்'...!
We not spare anyone Prime Minister Modi last chance West Bengal rowdy gangs
மேற்கு வங்காள மாநிலம் பாங்குரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார் என தெரிவிக்கப்படுகின்றது.அவர் தனது உரையில், “பாஜகவின் அடிப்படை அடையாளமே பெண்களின் அதிகாரம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியுடன் இணைந்ததாகும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பெண்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் பாஜக மீது நம்பிக்கையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர். வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் பெண்களின் பங்கு மேலும் விரிவடைய வேண்டும்” என தெரிவித்தார்.மேலும், மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த அவர், “அந்தக் கட்சி பெண்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் செய்துள்ளது.
இந்தத் துரோகத்துக்கு மக்கள் சரியான பதிலை அளிக்க வேண்டுமா இல்லையா?” என கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.தேர்தல் சூழ்நிலையை குறிப்பிட்டுப் பேசும் போது, “மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள தேர்தல் புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கமாக அமையும். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கும்பல் மற்றும் குண்டர் அரசியலுக்கு கடும் முடிவு கட்டப்பட வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாகவே தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் நிலையை திருத்திக் கொள்ள வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அவர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, பெண்கள் நலத்திட்டங்களை விரிவாக அறிவித்த அவர், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை, இலவச டயாலிசிஸ், ஆண்டுதோறும் நிதியுதவி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, மகள்களின் கல்விக்கான நிதி, சுயதொழில் ஊக்கத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
We not spare anyone Prime Minister Modi last chance West Bengal rowdy gangs