சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு!
There is a possibility of rain with thunder and lightning in Chennai and the suburban areas
சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி ,நீலகிரி ,தேனி திண்டுக்கல் ,கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்தது.
சென்னையில் கடந்த சிலநாட்களாக மாலை நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.ஒருபுறம் மழை பெய்துவந்தாலும் மறுபுறம் வெப்பம் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு அதிக வெப்ப இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இன்று (9.6.2025) அதிகபட்சமாக 100.4 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் 7ம் தேதி 100.8 டிகிரியும், 8ம் தேதி 104 டிகிரியும், இன்று 100.4 டிகிரியும் என தொடர்ந்து மூன்று நாட்களாக வெயில் சதம் அடித்துள்ளது.
இந்தநிலையில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென வானம் இருண்டது. பின்னர், மிதமான மழை பெய்யத் தொடங்கியது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழைவருகிறது.
சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை கொட்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
English Summary
There is a possibility of rain with thunder and lightning in Chennai and the suburban areas