ரூ.10 லட்சம் செலவில் மணவெளி ஆத்து வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்!
The work to desilt the marriage hall canal at a cost of Rs. 10 lakhs has commenced
வில்லியனூர் மணவெளி ஆத்து வாய்க்கால் ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரும் பணியினை எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.
வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் (100 நாள் வேலை) வில்லியனூர் தொகுதி மணவெளி கிராமத்தில், தண்டுக்கரையிலிருந்து வேல்ராம்பட் வரை உள்ள ஆத்து வாய்க்கால் ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது.
இதற்கான பணி தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு 100 நாள் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் இஷிதா ரதி, செயற்பொறியாளர் சீனிவாசன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி தயானந் டெண்டுல்கர், உதவிப் பொறியாளர் இராமன், இளநிலை பொறியாளர் அன்சாரி, பணி ஆய்வாளர் மாறன், கிராம திட்ட ஊழியர் கலைச்செல்வி மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர் ஜெகன்மோகன், தொகுதி செயற்குழு உறுப்பினர் அக்பர், மற்றும் ஜெனா, மிலிட்டரி முருகன், சேகர், வேல்முருகன், பாண்டியன், அரி, சரவணன், சுரேஷ், சராபுதீன், பாலதண்டாயுதம், முருகேசன், ரகு, நாதன், சந்தோஷ், தூசன், லியான், அதிபர், கலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary
The work to desilt the marriage hall canal at a cost of Rs. 10 lakhs has commenced