பேருந்து கட்டண உயர்வு: பொதுமக்கள் 03 வாரத்துக்குள் கருத்து தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு..!
The Transport Department announces that the public can comment within 03 weeks on the bus fare hike
சாதாரண பேருந்துகளில் புறநகர் பகுதிகளில் 10 கிலோமீட்டருக்கு ரூ.06 எனவும், விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோமீட்டருக்கு ரூ.24 எனவும், சொகுசு இடைநில்லா பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோமீட்டருக்கு ரூ.27 எனவும், குளிர்சாதன பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோமீட்டருக்கு ரூ.42 எனவும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2018-ஆம் ஆண்டுக்கு பின்னர் டீசல் மற்றும் பேருந்துகளுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு பேருந்துகளுக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது. அதாவது, தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க, போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் சென்னை, ஈரோடு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை கட்டண உயர்வு கோரி தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம்உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசின் பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்றை போக்குவரத்து ஆணையரின் தலைமையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.

அத்துடன், நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், டீசல், உதிரிப் பாகங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை பொறுத்து கட்டணத்தை உயர்த்தக் கூடிய குறியீட்டு முறையை மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகிறது எனவும், இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும், இதற்காக சென்னை, கிண்டியில் செயல்பட்டு வரும் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து அல்லது தபால் மூலமாக தங்கள் கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அனுப்ப வேண்டிய முகவரி:
முதன்மை செயலாளர்/போக்குவரத்து ஆணையர், கிண்டி, சென்னை-600032 .
tc.tn@nic.in அல்லது தபால் மூலமாகவோ 03 வாரத்திற்குள் கருத்துகளை அனுப்பி வைக்கலாம்.
English Summary
The Transport Department announces that the public can comment within 03 weeks on the bus fare hike