உலகின் மிக உயரமான செனாப் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
Chenab Bridge Vande Bharat Rail PM Modi
உலகின் மிக உயரமான ரெயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலம், ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 6-ம் தேதி இதனைத் திறந்து வைக்க உள்ளார்.
இந்த ரெயில்வே பாலம், முக்கிய உள்கட்டமைப்புத் திட்டமாகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திலும், ஊரக பகுதிகளின் ரயில்வே இணைப்பிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதேநேரத்தில், ஸ்ரீநகரை கத்ராவுடன் இணைக்கும் இரு புதிய வந்தே பாரத் ரெயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கவுள்ளார்.
முன்னதாக ஏப்ரலில் திட்டமிடப்பட்ட பால திறப்பு விழா, வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
Chenab Bridge Vande Bharat Rail PM Modi