என்ன காரணம்?சரிந்து கொண்டே போகும் தர்மபுரி ஒகேனக்கலின் நீர்வரத்து...!
Dharmapuri Hogenakkal water flow continues to decline
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.இந்நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6000 கன அடியாக வந்தது.

இதில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தற்போது குறைந்துள்ளதால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.இதனால், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 5500 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இருப்பினும் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
மேலும், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Dharmapuri Hogenakkal water flow continues to decline