பாகிஸ்தான் தலைவர்களையே மிஞ்சிய ராகுல் காந்தியின் பேச்சு – பாஜக கடும் விமர்சனம் - Seithipunal
Seithipunal


போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், வாஷிங்டனின் ஒரு அழைப்புக்குப் பிறகு மோடி சமாதானம் செய்துகொண்டார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராகுல்காந்தியின் இந்த பேச்சு பிரதமரின் தன்னம்பிக்கைக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் கேள்விக்குறி எழுப்புவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராகுல் விமர்சனம் செய்தது இந்திய ராணுவத்தின் தியாகத்தை இழிவுபடுத்துவதாக பாஜக தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய பேச்சாளராகிய சுதான்ஷு திரிவேதி மேலும் தெரிவிக்கையில். “ராகுல் காந்தியின் விமர்சனங்கள் பாகிஸ்தான் தலைவர்களைக் கூட மிஞ்சும் வகையில் உள்ளன.

இந்திய வரலாற்றை புறக்கணித்து பேசும் காங்கிரஸ், பாகிஸ்தானின் பக்கம் நிற்கிறது. இந்தியா இவர்களது வாயில் இருக்கலாம், ஆனால் பாகிஸ்தான் நெஞ்சில் உள்ளது,” எனக் குற்றம்சாட்டினார்.

அத்துடன், “ராகுலின் கருத்துகள் அரசியல் அறப்பிழைகள். இது ஆலோசகர்களின் திட்டமென்றால், அவர்களை உடனே மாற்றவேண்டும்,” என்றும் எச்சரித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi BJP Rahul Gandhi congress


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->