தாயுடன் தகராறு செய்த தந்தை... அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன்...! திருச்சியில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்த தந்தையை, மகன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

திருச்சி மாவட்டம் பாலகிருஷ்ணம்பட்டி விஸ்வாம்பாள் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (45). இவரது மனைவி சுஜாதா. இந்நிலையில் புகழேந்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். இதையடுத்து நேற்று மாலையும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை மகன் சுரேந்திரன் தட்டி கேட்டுள்ளார்.

இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து சுரேந்திரன் வெளியே சென்று விட்டார். இந்நிலையில் மீண்டும் மனைவியுடன் சண்டை போட்ட புகழேந்தி, மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து நள்ளிரவு சுரேந்தர் வீட்டிற்கு வந்தபோது தாய் அழுது கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்து மன வேதனை அடைந்த சுரேந்தர், ஆத்திரத்தில் தந்தையை சரமாரியாக தாக்கி அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து தந்தையின் தலையில் போட்டுள்ளார். 

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் புகழேந்தி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த புகழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சுரேந்தரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The son murder his father by throwing a stone on his head in Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->