எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை..கார்கே காட்டம்!
The opposition parties have no significance its a farce
"நாடு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் இருந்தது வருத்தகரமானது. பாதுகாப்புப் படைகளின் வெற்றியை சிலர் தனிப்பட்ட புகழாக மாற்றுகிறார்கள் என கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ராய்சூரில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்தார்:
"பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை," என்றும்
"பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தபோது, இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வழங்கப்பட்டாலும், பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்றும், அதே நேரத்தில் பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்றும் கார்கே விமர்சித்தார்.
"நாடு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் இருந்தது வருத்தகரமானது. பாதுகாப்புப் படைகளின் வெற்றியை சிலர் தனிப்பட்ட புகழாக மாற்றுகிறார்கள்.
முக்கிய முடிவுகளில் எதிர்க்கட்சிகளை பங்கேற்கவைக்காமல் விலக்குவது ஜனநாயகத்துக்கே எதிரானது. இளைஞர்கள் உள்ளிட்ட மக்கள் இதை ஏற்கமாட்டார்கள்," என்றார் கார்கே.
English Summary
The opposition parties have no significance its a farce