இறுதி சடங்கில் முதியவர் உயிரோடு எழுந்த அதிசயம்! - Seithipunal
Seithipunal


மும்பையில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட முதியவர் இறுதி சடங்கில் உயிரோடு எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கடந்த காலங்களிலும் சரி நிகழ் காலங்களிலும் சரி பல அதிசய நிகழவுகள் நிகழ்ந்து வருகிறதை நம்மால் காணமுடிகிறது.அதில் ஒன்று இறந்த மனிதன் இறுதி சடங்கில் உயிரோடு எழுந்து வருவது.அப்படி ஒரு சம்பவம்  மும்பையில் நிகழ்ந்துள்ளது.மும்பையை அடுத்த உல்லாஸ்நகர் கேம்ப் நம்பர்-4 பகுதியை சேர்ந்தவர் 65 வயதான அபிமன்யு தாய்டே . இவர் புற்றுநோய்க்கு மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்தநிலையில் நேற்று காலை முதியவரின் உடல்நிலை மோசமானதும்  அவரது மகன் முதியவரை ஆட்டோவில் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

அங்கு முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டு இறப்பு சான்றிதழும் வழங்கினர்.இதையடுத்து அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கிற்கான வேலைகளை தொடங்கினர். இந்தநிலையில் முதியவரின் இதயம் துடிப்பதை  கவனித்த குடும்பத்தினர் உடனடியாக  தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது முதியவர் உயிருடன் இருப்பது தெரியவந்ததையடுத்து  அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே மனிதநேய அடிப்படையில் தான் முதியவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியதாக சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் கூறியுள்ளார்றினர். உயிருடன் இருந்த நபரை இறந்து விட்டதாக டாக்டர் அறிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The miracle of the elderly person rising with life at the final rites


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->