காதலியின் வீடு தேடி வந்த காதலுனுக்கு அடி, உதை!
The lover who came searching for his beloveds house got beaten up
காதலியின் வீடு தேடி வந்த காதலனை காதலியின் அண்ணன் சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்,புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணனை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த 20 வயதான சிஜூயும், மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வருவே ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில் பின்னர் கல்லூரி படிப்பு முடிந்த பின்பு திருமணம் செய்து கொடுப்பதாக பெற்றோர் முடிவெடுத்தனர். இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இளம்பெண் காதல் திருமணம் செய்வது அவரது அண்ணனுக்கு பிடிக்காததால் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.இப்படி இருக்க சம்பவத்தன்று இளம்பெண்ணின் அண்ணன், சிஜூவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இளம்பெண்ணின் அண்ணன், தனது தங்கையிடம் பேசக்கூடாது என்றும், எங்கள் வீட்டின் அருகே வந்து பார் என சவால் விடுத்தார். அப்போது சிஜூ, வருவேன் என சவாலை ஏற்றுக்கொண்ட இளம்பெண்ணின் வீட்டின் அருகே வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் அண்ணன், சிஜூவிடம் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிஜூவை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து சிஜூ அருமனை போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணனை தேடி வருகின்றனர்.
English Summary
The lover who came searching for his beloveds house got beaten up