தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு! முதலமைச்சர், அமைச்சர்களுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக ஆட்சியை பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி முதலமைச்சருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பதவியேற்று ஓராண்டு நிறைவுற்று இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 33 அமைச்சர்களும் அவருடன் பதவியேற்றுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி பல்வேறு தலைவர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் நல்ல உடல் நலத்துடனும் மக்கள் சேவையில் தொடர்ந்து பணியாற்ற எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The governor congratulated CM and ministers


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->