ஜிம் மாஸ்டரை அரிவாளால் வெட்டிய கும்பல்..! கோழிக்கறி கடையில் ஏற்பட்ட தகராறில் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் கோழி கறி கடையில் ஏற்பட்ட தகராறில் ஜிம் மாஸ்டரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ராமாபுரம் பகுதியில் ஜிம் நடத்தி வருபவர் சுரேஷ். மேலும் இவர் அதே பகுதியில் கறிக்கடை ஒன்றும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், கடைக்கு கறி வாங்க வந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிலரை சுரேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் முன்விரோதத்தில், 15 க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென ஜிம்முக்குள் புகுந்து சுரேஷ் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.

மேலும் அவரது தம்பி பாஸ்கரையும் அறிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து பலத்த காயம் அடைந்த இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The gang who cut the gym master with a sickle in tiruvallur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->