முதல் மரியாதை” வழக்கத்தை நிறுத்த வேண்டும்..சென்னை ஐகோர்ட் கண்டனம்!
The 'First Honor case should be dismissed Chennai High Court condemnation
கோவில் விழாக்களில் “முதல் மரியாதை” கோருவது சமத்துவத்திற்கு எதிரானது என்றும், அதனை நிறுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள பந்தீஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகா பெரிய குண்டம் விழாவில், தனது குடும்பத்திற்கு “முதல் மரியாதை” வழங்க வேண்டும் எனக் கோரி தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடர்ந்தார்.
அவர் தொடர்ந்த இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:“முதல் மரியாதையை” கோருவது, கடவுளை விட தங்களை மேலாக காட்டும் செயலாக உள்ளது,இது சமத்துவத்திற்கு விரோதமான நடைமுறை,பல விழாக்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு இதுவே காரணமாகிறது,கடவுளின் முன் அனைவரும் சமம்தான்,விழாக்களின் புனித நோக்கங்களை வீழ்த்தும் மரபாக இது மாறியுள்ளது, என கூறி மனுதாரரின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
மேலும் கோவில் விழாக்களில் “முதல் மரியாதை” கொடுக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்
English Summary
The 'First Honor case should be dismissed Chennai High Court condemnation