பள்ளி தோழனை நம்பியதால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!
The disaster that happened to the young girl because she trusted her school friend
பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை காரில் அழைத்து சென்று பள்ளி தோழன் பலாத்காரம் செய்த சம்பவம் குமரி மாவட்டம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஒரு துணிகடையில் வேலை செய்து வரும் அந்த பெண் ,பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்த வாலிபர் ஒருவரிடம் பார்க்கும்போதெல்லாம் நன்றாக பேசுவார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் பஸ்சில் ஏறுவதற்காக இரவு 9 மணியளவில் குழித்துறை சந்திப்பில் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது காரில் அங்கு வந்த பள்ளி தோழனான வாலிபர் அந்த பெண்ணிடம், காரில் வீட்டில் கொண்டு விடுவதாக கூறி பின் இருக்கையில் அமரவைத்து கூட்டி சென்றுள்ளார்,அப்போது அந்த பெண்ணிடம் நீ எனது வீட்டிற்கு வந்து எனது மனைவியையும், குழந்தைகளையும் பார்த்துவிட்டு போ' என்று கூறியுள்ளார்.
நண்பர் என்ற முறையில் அந்த பெண் வீட்டுக்குள் சென்றுள்ளார்.அவரது பேச்சை நம்பிய அந்த பெண் வீட்டுக்குள் சென்றபோது வீட்டில் வேறு யாரும் இல்லை என்பது தெரியவந்தது.இதையடுத்து அந்த வாலிபர் திடீரென வீட்டின் கதவை மூடி பெண்ணின் வாயைப் பொத்தி அவரை அறைக்குள் இழுத்து சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.
பின்னர் அந்த வாலிபர், 'இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் உன்னையும் உன் குழந்தைகளையும் கொன்று விடுவேன். உன் கணவரை கார் ஏற்றி கொன்று விடுவேன்' என்று மிரட்டி உள்ளார்.
அந்த பெண் தனது வீட்டிற்கு சென்ற பின்பு இந்த சம்பவம் பிறருக்கு தெரிந்தால் அவமானம் ஏற்படும் என்பதால் யாரிடமும் கூறவில்லை. மேலும் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந் அந்த பெண் நடந்த சம்பவத்தை கணவரிடம் சொல்லி அழுதார்.
அதை தொடர்ந்து அந்த பெண் வாலிபரின் வீட்டிற்கு சென்று வாலிபரின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை எடுத்து சொல்லி அவரை கண்டிக்குமாறு கூறினார். உடனே வாலிபரின் அக்கா, அந்த வாலிபர் ஆபாசமாக பேசியதுடன் 'நீ பொய் சொல்கிறாய்' என கையால் தாக்கி, காலால் வாயில் மிதித்தார். இதில் காயமடைந்த பெண் அங்கிருந்து தப்பி வந்தார்.
இதுகுறித்து அந்த பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
The disaster that happened to the young girl because she trusted her school friend