மாடு மேய்ப்பதற்கு கூட ஏற்ற இடம் இல்லை என்பதை முதல்வர் உணர வேண்டும்.. EX MLA சாமிநாதன் பதிலடி!
The chief minister should realize that there is no suitable place even for grazing cattle Reply from former MLA Saminathan
புதுச்சேரியில் ஐடி பார்க் என்ன ஆனது. மேலும் மாடு மேய்ப்பதற்கு கூட ஏற்ற இடம் புதுச்சேரியில் இல்லை என்பதை முதல்வர் உணர வேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள நிதி பிரச்சனை மற்றும் வளர்ச்சி பணிக்கான பிரச்சினைகள் அனைத்தையும் மாநில சம்பந்தமாக பேசி தீர்வு காண வேண்டிய நிதி ஆயோக் கூட்டத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி போகாமல் புறக்கணிப்பது புதுவை மாநில வளர்ச்சியை தொடர்ந்து பாதிக்கும். பேச வேண்டிய இடத்தில் பேசாமல், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கொண்டு பேசி என்ன பயன். எதிரும் புதிருமான எதிர்கட்சிகள் கூட நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மாநிலத்தின் குரலை எழுப்பும் போது, புதுச்சேரியினுடைய வாய்ப்பை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் புறக்கணிப்பதும், போகாமல் இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம் அல்ல. இதன் மூலம் ஒட்டுமொத்த புதுச்சேரி மாநிலத்தினுடைய மக்களுடைய எண்ணங்களை, வளர்ச்சியை, மறைமுகமாக தடுத்துள்ளார்.
மேலும், இதுபோல் முக்கிய கூட்டங்களுக்கு செல்லாமல் சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சரை சந்திக்காமல் புதுவை மாநிலம் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு துறையில் பின்தங்கி உள்ளது. இதற¢கு ஆண்ட காங்கிரசும், ஆளுங்க¤ன்ற அரசும் காரணம். ஒட்டு மொத்தமாக எந்த விதமான நிதி ஆதாரமில்லாமல் புதுச்சேரி மத்திய அரசை நம்பி உள்ளதால் தொடர்ந்து மத்திய அரசிடம் பேச வேண்டியது ஏராளமாக உள்ளது. அதை பயன்படுத்த தவறி விட்டார்.
பால் வளத்தை பெருக்க விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாத்து விவசாயிகளை மாட்டுப் பண்ணை வைக்க சொல்வது அழகு. ஐ.டி.பார்க்க ஆரம்பிப்பதாக சொல்லி, பல மில்களை திறப்பதாக சொல்லி, புதிய வேலைவாய்ப்புகளை பெருக்குவதாக சொல்லி இன்று ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை மாடுகளை மேய்க்க சொல்வது நியாயமா? அதே வேளையில் இங்குள்ள விவசாய நிலங்களை கடந்த 25 ஆண்டுகளாக அனுமதி இல்லாமல் ரியல் எஸ்டேட் வியாபாரங்களுக்காக விளை நிலங்களை பாழ்படுத்திவிட்டு மாடுகளை வளர்ப்பதற்கும், புல் வளர்ப்பற்கும், மாட்டு பண்ணை வைப்பதற்கும் இடமில்லாத நிலையில் தற்போது புதுச்சேரி உள்ளது.
மேலும், புதுச்சேரி உழவர்கரை நகராட்சியில் மிகவும் அறிவுள்ள அதிகாரிகள் இங்கு உள்ள வீட்டில் வளர்க்கும் மாடுகளை ரோட்டுக்கு வருவதாக சொல்லி தினசரி 2000, 3000 அபராதம் போட்டு, அந்த மாடுகளையும் வளர்க்க விடாமல் இங்கு உள்ள அதிகாரிகள் செய்யும் தவறுகள் முதலமைச்சருக்கு தெரியுமா என்பது கேள்விக்குறி. வீடுகளில் கூட மாடு வளர்க்க முடியாமல் உள்ள சூழ்நிலை தற்போது உள்ளது. புதியதாக யோசனை சொல்லும் முதலமைச்சர், அரசாங்கம் அதற்கான ஆலோசனை சொல்வது மட்டுமல்லாமல், செயல் திட்டங்களில் இறங்கினால் நல்லது. ஒட்டுமொத்தமாக புதுச்சேரி வேலை வாய்ப்பு இல்லாமல் பல திட்டங்கள் ஆரம்ப கட்டத்தில் நிற்பதற்கு இங்குள்ள அரசாங்கம் மத்திய அரசிடம் இது போன்ற கூட்டத்தில் பேசாமல் இருப்பது தான்.
புதுச்சேரி மாநிலம் சார்பாக தொடர்ந்து மக்களுக்கு துரோகம் செய்யும் அரசாங்கமாக உள்ளது. பிரதமர் அவர்கள் சொன்ன பெஸ்ட் புதுச்சேரி தற்போது கேள்விக்குறி! வருகின்ற சட்டமன்றத்தில் புதிய நபர்கள் படித்தவர்கள் அரசாங்கத்திற்கு வர வேண்டும். மக்கள் அதற்கு ஆதரவு தர வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் நித ஆயோக் கூட்டத்தை எதிர்க்கட்சிகளே புறக்கணிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் முதலமைச்சர் ரங்கசாமி இந்த கூட்டணியை புறக்கணிப்பது மாநிலத்தை வளர்ச்சி பாதிக்கும் என்பதை உணர வேண்டும். மாநில அந்தஸ்தை பற்றி பேசி வரும் புதுச்சேரி முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தை கலந்து கொண்டு மாநில அந்தஸத்தை பற்றியும், வேலை வாய்ப்பு பற்றியும் மற்றும் கடன் தள்ளுபடி குறித்தும் பேசியிருக்கலாம். புதுவைக்கு மிக அருகில் உள்ள தமிழகப் பகுதியான வானூரில் பல கம்பெனிகள் இருக்கின்றன. வானூரில் ஐ. டி. பார்க் ஆரம்பித்து பல கம்பெனிகள் உள்ளன. ஆனால் புதுச்சேரியில் ஐடி பார்க் என்ன ஆனது. மேலும் மாடு மேய்ப்பதற்கு கூட ஏற்ற இடம் புதுச்சேரியில் இல்லை என்பதை முதல்வர் உணர வேண்டும்- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
English Summary
The chief minister should realize that there is no suitable place even for grazing cattle Reply from former MLA Saminathan