ஜன நாயகன் பட வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ள தணிக்கை வாரியம்..!
The Censor Board has filed a caveat petition in the Supreme Court in the Jananayagan film case
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் கடைசி படமான 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதைதொடர்ந்து, 'ஜன நாயகன்' சென்சார் விவகாரத்தில் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதாவது, ," ஜன நாயகன் சான்றிதழ் தொடர்பாக தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது" என தணிக்கை வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The Censor Board has filed a caveat petition in the Supreme Court in the Jananayagan film case