தீடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்! மரத்தில் மோதி 3 பேர் பலி! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பி வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது  கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் தந்தை, மகன் உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சூலை ஜிகேஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் கிருஷ்ணகுமார். இவருடைய மனைவி மோகனா, மகன் சுதர்சன், மகள் வருணா, மாமியாரின் இந்திராணி ஆகியோரின் காரில் கடந்த 20 ஆம் தேதி ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு அதே காரில் வீடுகளுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அதிகாலை 3;30 மணி அளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கார் வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக கிருஷ்ணகுமாரின் கட்டுப்பாட்டை கார் சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி உள்ளது.

கார் வேகமாக மரத்தில் மோதியதால் கிருஷ்ணகுமார், வருணா , இந்திராணி உள்ளிட்டோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்து உள்ளனர். மோகனா, சுதர்சன், ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள்  விபத்தை பார்த்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு பிறந்த போலீசார் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The car suddenly lost control 3 people died after hitting a tree


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->