தஞ்சாவூர்: அதிகாலையில் இடிந்து விழுந்த சுவர்.. பரிதாபமாய் பலியான சிறுவன்..! - Seithipunal
Seithipunal


வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், சின்னமுத்தாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சலீம். இவருக்கு திருமணமாகி ஷகிலாபானு என்ற மனைவியும் ரிஸ்வானாபர்வீன் மற்றும் அசாருதீன் என்ற குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் , சம்பதன்று அதிகாலை அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் அந்த சிறுவன் அசாருதீன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The boy who was the victim of a wall that collapsed early in the morning


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->