தென்பெண்ணை ஆற்றில் கிடந்த ஆண் சடலம்.! போலீசார் விசாரணை.!
The body of a man found in Then pennai river in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் கிடந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் இதுகுறித்து இருமத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கம்பைநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தென்பெண்ணை ஆற்றில் கிடந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆற்றில் உயிரிழந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
The body of a man found in Then pennai river in dharmapuri