ரேஷன் காய்களில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் நிறுத்தம்: மத்திய அரசு அதிரடி முடிவு!
Temporary Suspension of Fortified Rice Distribution Due to Storage Issues
ஊட்டச்சத்து குறைபாட்டைத் துரத்தத் தொடங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) திட்டம், தற்போது 'சேமிப்பு' என்ற முட்டுக்கட்டையைச் சந்தித்திருக்கிறது. இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றை எளிய மக்களிடம் சேர்க்க 2021-ல் பிரதமர் மோடியால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
ஏன் இந்தத் தற்காலிகத் தடை?
மத்திய அரசின் உணவு தானியங்கள் பொதுவாக 2 முதல் 3 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கப்படுகின்றன. ஆனால், காரக்பூர் ஐஐடி (IIT Kharagpur) நடத்திய ஆய்வில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன:
உடையும் அரிசி: இந்திய தட்பவெப்ப நிலையில் நீண்ட காலம் சேமிக்கும்போது செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் உடையத் தொடங்குகின்றன.
சத்து குறைவு: காலம் செல்லச் செல்ல அதில் சேர்க்கப்பட்டுள்ள நுண்ணூட்டச் சத்துக்களின் அளவும் வீரியமும் குறைகிறது.
அடுத்த கட்டம்:
தற்போது மத்திய அரசின் கிடங்குகளில் சுமார் 674 லட்சம் டன்கள் அரிசி இருப்பு உள்ளது. இந்தச் சேமிப்புச் சவாலை எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பத் தீர்வுகள் கிடைக்கும் வரை, ரேஷன் கடைகள் மூலம் இந்த அரிசியை விநியோகிப்பதை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
English Summary
Temporary Suspension of Fortified Rice Distribution Due to Storage Issues