தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்.. பள்ளி மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்த ஆசிரியர்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். 

இதில் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் ஆசிரியர்களை நம்பி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்புகின்றனர் .ஆனால் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான மாணவிகள் இதனை வெளியில் கூறாமல் தற்கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்ற பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளிடம் ஆபாச பாடம் நடத்தியுள்ளார். 

இது குறித்து மாணவிகள் பெற்றோரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைகள் உதவி மைய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teacher took sexual lesson to schoolgirls


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->