டாஸ்மாக் அதிரடி அறிவிப்பு! "குடி"மகன்களுக்கு மகிழ்ச்சி செய்தி!  - Seithipunal
Seithipunal


கொரோனா காரணமாக நேரம் குறைக்கப்பட்டிருந்த டாஸ்மார்க் திறந்திருக்கும் நேரம் ஆனது தற்போது மாற்றி அமைத்து டாஸ்மாக் நிர்வாகம் அரசாணை வெளியிட்டுள்ளது.  

இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கூடங்கள் நவம்பர் 1 முதல் நண்பகல் 12:00 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கொரோனா ஊரடங்கு காரணமாக முதல் மூன்று மாதங்கள் மூடப்பட்ட நிலையில், பின்னர் படிப்படியாக நேரம் அதிகரித்து அதிகரித்து வந்த நிலையில், நாளை முதல் முழு வேலை நேரமும், அதாவது முன்னதாக இயங்கிவந்த அலுவல் நேர அளவிலேயே மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பின் மூலம் தமிழகம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதை காட்டுகிறது. மேலும் இந்த அறிவிப்பானது "குடி"மகன்களுக்கு புது உற்சாகத்தை கொடுக்கும் என தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tasmac shop time increased BY Tasmac


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->