#BREAKING : தொடர்மழை காரணமாக.. தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


கனமழை காரணமாக தமிழகத்தில் என்று 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.  அதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலின் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்தது இருந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதனால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் கனமழை காரணமாக  இன்று மற்றும் நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவதாக அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

அதேபோல், கனமழை காரணமாக சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu today 7 holiday for due to heavy rain


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->