தமிழகத்தில் 7 மாவட்டங்களில்... கேரளாவின் 3 மாவட்டங்களில்... வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!
Tamilnadu Rain Alert Weather Update 02092023
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (02.09.2023) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், கோவை, நெல்லை, நீலகிரி, தேனி. திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு... இன்றும், நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளத்தின் பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Tamilnadu Rain Alert Weather Update 02092023