தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னதாக மே 26-ந்தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2025-26ம் கல்வியாண்டில் மேலும் 4 கல்லூரிகள் செயல்பட உள்ளன.

இது, கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வியில் அதிக வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தக் கல்வி நிறுவனங்கள் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அமைக்கப்படும்.

இந்த புதிய கல்லூரிகள் செயல்பட தொடங்கினால், கிராமப்புற மாணவர்கள் 1,120 பேர் உயர் கல்வி பெறும் வாய்ப்பு பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu 4 new Arts and science college


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->