தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
Tamilnadu 4 new Arts and science college
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக மே 26-ந்தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2025-26ம் கல்வியாண்டில் மேலும் 4 கல்லூரிகள் செயல்பட உள்ளன.
இது, கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வியில் அதிக வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தக் கல்வி நிறுவனங்கள் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அமைக்கப்படும்.
இந்த புதிய கல்லூரிகள் செயல்பட தொடங்கினால், கிராமப்புற மாணவர்கள் 1,120 பேர் உயர் கல்வி பெறும் வாய்ப்பு பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Tamilnadu 4 new Arts and science college