பல்வேறு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் தொமுசவில் ஐக்கியம்!
Managers associated with various associations unite at Thomuch
பி.ஆர்.டி.சியில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் மாநில கழக அமைப்பாளர் திருமிகு. இரா. சிவா அவர்கள் முன்னிலையில் தொமுசவில் இணைந்தனர்.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் டேனியல், வரதப்பநாயுடு, சங்கர், ரமேஷ், தீனதயாளன், காத்தவராயன், பச்சையம்மாள், கார்த்திகேயன், கருணாமூர்த்தி உள்ளிட்ட 50கும் மேற்பட்டோர் தங்கள் சங்கத்தில் இருந்து விலகி புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திருமிகு. இரா. சிவா அவர்கள் முன்னிலையில் தங்களை தொமுசவில் இணைத்துக் கொண்டனர்.
இதில் மாநில கழக அமைப்பாளர் பேசியதாவது ... புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை 10 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளனர். ஊழியர்களின் எந்த ஒரு அடிப்படை கோரிக்கைகளையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை, உள்ளிட்ட விஷயங்களை வரும் திங்கள்(02.06.2025) அன்று முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கையாக வைத்து குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வலியுறுத்துவோம். தமிழ்நாடு சாலை போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது அதனை புதுச்சேரியிலும் செயல்படுத்த வலியுறுத்துவோம். சங்கத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்து சங்க வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஏ.கே. குமார், கோபால், சக்திவேல், நடராஜன், மணிமாறன், காயத்ரி ஸ்ரீகாந்த், பாஸ்கரன் தொமுச மாநில நிர்வாகிகள் அண்ணா அடைக்கலம், அங்காளன், மிஷேல், காயாரோகணம், சிவக்குமார், துரை, சீனு, கண்ணன் மற்றும் பி.ஆர்.டி.சி. தொமுச நிர்வாகிகள் ராஜேந்திரன், திருக்குமரன், பாலகிருஷ்ணன், ஐயப்பன், வெங்கடாசலம், காசிலிங்கம், முத்தால் ராயன், பிரபு, சரஸ்வதி, சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
English Summary
Managers associated with various associations unite at Thomuch