சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா..மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்!
Environmental awareness festival Celebration with the distribution of saplings
புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா வெகு விமரிசியாக நடைபெற்றது.இதில் விழாவில் வண்ணச் சேலைகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா கதிர்காமம் அடுத்துள்ள மேட்டுப்பாளையம் அரசுக் கொறடா அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் தலைமை தாங்கி சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் அதனைத் தடுக்கும் வழிவகைகளும் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். விழாவில் துணைத் தலைவர் இரமேஷ் வரவேற்புரை வழங்கினார். ஆலோசகர் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஐயனார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி அமைப்பாளரும் மகளிர் பொறுப்பாளருமான விஜயலட்சுமி நோக்கவுரை கூறினார்.துணைத் தலைவர் பரிதா துணைச் செயலாளர் மகேந்திரவேலன், சுரங்கத்துறை பொறியாளர் செல்வராஜ் கருத்துரை வழங்கினர்.

வாசுகி மாதர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பச்சையம்மாள், மேரி, செல்வி, பாக்கியலட்சுமி, புஷ்பா, ஜெயந்தி வாழ்த்துரை வழங்கினர். விழாவில் வண்ணச் சேலைகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர்ப் பெரியவர்கள், புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கணபதி, சந்துரு, இரவி செய்திருந்தனர். மண்டல அமைப்பாளர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.
English Summary
Environmental awareness festival Celebration with the distribution of saplings