காப்பகத்தில் கத்தி குத்து..12 பேர் காயம்!
Stabbing in the shelter 12 injured
காப்பக ஊழியர்களுடன் தங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில்,12 பேரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் அவ்வப்போது கத்திக்குத்து,துப்பாக்கியால் சுடுவது, வாகனங்களை கொண்டு மோத செய்வது போன்ற குற்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன, இது பல்வேறு நாடுகளில் தொடர்கதை உள்ளது,அதேபோல் ஒரு சம்பவம் அமெரிக்காவின்நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் சேலம் நகரில் சொந்த பந்தங்கள் இல்லாதவர்களுக்கு புகலிடம் அளிக்கும் வகையில் இந்த காப்பகம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், 42 வயதான டோனி லாட்ரெல் வில்லியம்ஸ் என்பவர் சேலம் நகரில் உள்ள இந்த காப்பகத்திற்கு சென்ற அவர் முதல் நாள் இரவில் அமைதியாக இருந்து பின்னர் அடுத்த நாள் வன்முறையில் இறங்கியுள்ளார்.
காப்பக ஊழியர்களுடன் தங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், உடன் வைத்திருந்த கத்தியால் தாக்குதலில், காப்பகத்தில் தங்கியிருந்தவர்களில் 12 பேர் காயமடைந்தனர். அவர்களில் 11 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று டோனியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
English Summary
Stabbing in the shelter 12 injured