முன்னாள் அமைச்சர் வீட்டு வாசலில் வெடிக்காத பட்டாசுகள் - போலீஸ் விசாரணை! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டு வாசலில் வெடிக்காத பட்டாசுகளை வீசி சென்ற  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் சமீபகாலமாக கவர்னர் மாளிகை, முதலமைச்சர் வீடு ,கலெக்டர் ஆபீஸ், பிரபல ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது, ஆனால் இதுவரை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டு வாசலில் வெடிக்காத பட்டாசுகளை வீசி சென்ற  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி சுப்ரேன் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷாஜகான் வீட்டு வாசலில் வெடிக்காத பட்டாசுகளை மர்ம நபர்கள் போட்டுச்சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்காத பட்டாசுகளை பாதுகாப்பாக எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக ஆளுநர் மாளிகை, முதல்வர் இல்லம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஜிப்மர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் வீட்டு வாசலில் பட்டாசு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Firecrackers that did not explode in the former ministers residence police investigation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->