நடுகடலில் தமிழக மீனவர்கள் கைது., எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றசாட்டு..!!
Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீன்வர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இதில் சின்னபிள்ளை என்பவருக்கு சொந்தமான படகில் 20 மேற்பட்ட மீன்வர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
பருத்தி துறை கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்களை கைது செய்து அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற்படையின் இது போன்ற செயல்களால் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
English Summary
Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy