மக்களே குட் நியூஸ்! பௌர்ணமியை முன்னிட்டு தாம்பரம் To திருவண்ணாமலை சிறப்பு ரயில்! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

பௌர்ணமி தினத்தை  முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலரீஸ்வரர் திருக்கோவிலுக்கு அதிக அளவில்  பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பௌர்ணமி நாளன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கிரிவலத்தை சுற்றி சாமியை வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில், பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது.

தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும்.

அதே ரயில் காலை 8 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்பட்டு மதியம் 12.30 க்கு தாம்பரம் வந்தடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tambaram to Tiruvannamalai Special Train


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->