துணியை சரியாக தைக்க சொன்னதால் வாக்குவாதம், நண்பரை கொலை செய்த டைலர் கைது..! - Seithipunal
Seithipunal


 நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் அவரது நண்பர் மாதவனுடன் அந்த பகுதியில் உள்ள கடையில் டைலராக பணியாற்று வருகின்றனர்.  சம்பவதன்று மாதவன் சரவணன் தைத்த துணியை சரியாக தைக்குமாறு கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரவணன் கத்தரிக்கோலால் மாதவனை குத்தியுள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த மாதவன் அங்கிருந்த கத்திரிக்கோலால் சரவணனின் மார்ப்பில் குத்தியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இத சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மாதவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tailor Murder in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->