புதுச்சேரி வங்கியில் திடீர் தீ...! எரிந்த ஆவணங்கள்... ஆனால் சந்தேகம் நீங்கவில்லை...!
Sudden fire Puducherry Bank Documents burnt but suspicions not gone
புதுச்சேரி நகரின் முக்கிய பகுதியான புஸ்சி வீதி - எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பில் செயல்பட்டு வந்த தனியார் வங்கியில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் அரங்கேறியது.
மாலை வேளையில் பணி முடிந்த ஊழியர்கள் வழக்கம் போல் வங்கியை பூட்டி சென்றனர். ஆனால், நள்ளிரவு 12 மணியளவில் வங்கிக்குள் இருந்து திடீரென புகை எழ ஆரம்பித்தது.
அச்சத்துடன் அதை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த இரவு காவலாளர், உடனடியாக அவசர எண் 100-க்கு தகவல் தெரிவித்தார்.சில நிமிடங்களில் ஒதியன்சாலை காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதே நேரத்தில் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து செயல்பட்டனர்.இதில் ஒரு மணி நேரத்துக்கும் மேலான போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்குள் கேஷ் கவுண்டரில் இருந்த பணம் எண்ணும் இயந்திரம், ஏ.சி. இயந்திரம், மேசை, நாற்காலிகள் என அனைத்தும் சாம்பலானது.
மேலும் அவற்றின் மீது வைக்கப்பட்டிருந்த ஆவணங்களும் தீக்கிரையானது.இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, வங்கியின் பணம் வைக்கும் அறைக்கு தீ பரவாமல் இருந்ததால் கோடிக்கணக்கான ரூபாய்கள் பாதுகாப்பாக தப்பின.முதற்கட்ட விசாரணையில், கேஷ் கவுண்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sudden fire Puducherry Bank Documents burnt but suspicions not gone