ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி: குப்புற கவிழ்ந்த பேருந்து! பயணிகளின் கதி? - Seithipunal
Seithipunal


வாழப்பாடி அருகே தனியார் பேருந்து ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

சேலம், ஆத்தூரில் இருந்து வாழப்பாடி வழியாக இன்று காலை தனியார் பேருந்து ஒன்று மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அடுத்துள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலை தடுமாறி சாலையில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்து கண்ணாடிகளை உடைத்து இடுபாடுகளில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தினால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden chest pain for driver bus overturned accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->