காவல்நிலையத்தில் தற்கொலை முயன்ற சப் இன்ஸ்பெக்டர்..! - Seithipunal
Seithipunal


விஷமருந்தி சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பொத்தனூரைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் ஜேடர்பாளையம் காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருகிறார். இன்று காவல்நிலையத்திற்கு வந்த அவர் வாங்கி வைத்திருந்த விஷமருந்தி மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறெதேனும் காரணமான என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்நிலையத்திலேயே சப்- இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sub Inspector Attempted Suicide in bus stop


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->