உல்லாசத்துக்கு அழகிகளை புக் செய்த மாணவர்கள்..கடைசியில் நேர்ந்த பரிதாபம்! - Seithipunal
Seithipunal


உல்லாசத்துக்கு அழகிகளை புக் செய்த மாணவர்களுக்கு கடைசி வரை அழகிகள் கிடைக்காததால் புரோக்கரை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கடந்த சனிக்கிழமை புதுச்சேரிக்கு,சென்னையில் செயல்படும் பிரபல என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் தினேஷ்குமார், அப்சர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் உல்லாச சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது உல்லாச சுற்றுலாவை அழகிகளுடன் கொண்டாட அவர்கள் திட்டமிட்டு அதற்காக ஆன்லைன்' மூலம் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் அனுப்பி 4 விபசார அழகிகளை அனுப்புமாறு முன்பதிவு செய்தனர்.

ஆனால் 'ஆன்லைன்' மூலம் பணத்தை பெற்றுக் கொண்ட விபசார தரகர் கடைசிவரை அழகிகளை அனுப்பி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் 3 பேரும் கோபத்துடன் அழகிகள் வேண்டும் அல்லது பணத்தை திருப்பி தர வேண்டும் என்று வந்து எழும்பூரில் வசிக்கும் விபசார தரகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது நடந்த மோதலில் மாணவர்கள் 3 பேரும் தரகரை அடித்து உதைத்து காரில் கடத்தி சென்றுவிட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக எழும்பூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடத்தியதாக புகார் கூறப்பட்ட தரகர் மீட்கப்பட்டார். மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Students who booked beautiful girls for the party ended up with a tragic event


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->