தந்தை திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் தந்தை திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் தொப்புளாம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் அபிநயா(16) மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மூர்த்தி அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு காப்பு கட்டி இருந்தார். இதைப் பார்த்த மகள் அபிநயா நானும் கோவிலுக்கு காப்பு கட்டுவேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மூர்த்தி, மகளை திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த அபிநயா தந்தையிடம் கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து அபிநயா தற்கொலை செய்து கொள்வதற்காக அங்கு விஷம் குடித்த மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த உறவினர்கள் உடனடியாக அபிநயாவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அப்பனதிருப்பதி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student suicide in madurai


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->