நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தாதே என பெற்றோர் கூறியதால் மாணவன் தற்கொலை..!
student committed suicide Near Ariyalur
செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் நல்லநாயக்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் டிப்ளமோ சேர்ந்துள்ளார். இவருக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தந்துள்ளனர்.
இந்நிலையில், அவர் நீண்ட நேரம் செல்போனிலேயே செலவிட்டதால் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
student committed suicide Near Ariyalur