+2 மாணவி தற்கொலை.. காவல்துறை தீவிர விசாரணை.. அரியலூர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


+2 மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், மணக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜாண். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவரின் மகள் ஜெரோசிணி  நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அவரது தாய் கோவில்லுக்கு சென்றுள்ளார். திரும்பி வீட்டிற்கு வந்த அவர் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் தூக்கில் தொங்கி பிணமாக கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவரை மீட்ட அக்கம் பக்கதினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student Committed Suicide Ariyalur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->