தமிழகத்தின் மோசமான நிலைக்கு எடப்பாடி தான் காரணமா..?! இணையத்தில் வைரலாகும் வீடியோவால் கிளம்பிய சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், " தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றேன். நான் கூறிய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முதல்வர் கேட்கவுமில்லை. செய்யவுமில்லை.

கொரோனாவை தடுக்க தொடர்ந்து ஏராளமான ஆலோசனைகளை கொடுத்துள்ளேன். மேலும், மருத்துவர்கள் தெரிவித்த ஆலோசனைகளையும் அவரிடம் கூறினேன். இவர் என்ன சொல்வது? நான் என்ன செய்வது? என்று முதல்வர் மிகவும் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றார். வைரஸ் பரவலை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

மருத்துவ நிபுணர் ஜேக்கப் ஜான் தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டது, என்று பேட்டி அளித்திருக்கிறார். பல்வேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  ஆனால், தமிழக அரசு சமூக பரவலாக மாறவில்லை என்று பொய் கூறுகின்றனர். வார்த்தை விளையாட்டாக நினைத்து மக்களின் வாழ்க்கையோடு எடப்பாடி விளையாடி வருகிறார். அவர் என்னுடைய ஆலோசனையை மட்டுமல்ல. யாருடைய ஆலோசனையையும் கேட்பதில்லை. 

இதனால் தமிழ் நாடு மிகவும் மோசமான பேரழிவை சந்தித்து வருகின்றது. தமிழகத்தின் இந்த பேரழிவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் பழனிசாமி தனக்கு பணம், கமிஷன் வருகின்ற திட்டங்களை பார்வையிட திருச்சிக்கும், கோவைக்கும் சென்று கொண்டிருக்கிறார்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin says about edappadi k palanisamy in video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->