'தேர்வு நடத்துவதிலேயே தோல்வி; மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்'; பெ.சண்முகம் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


''கல்வித் துறையின் மிக முக்கிய பணி முறையாகவும், நேர்மையாகவும் தேர்வு நடத்துவது. ஆனால், தொடர்ந்து தேர்வு நடத்துவதிலேயே தோல்வி அடைந்திருக்கிறது மத்திய அரசின் கல்வித் துறை. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் நீட் தேர்வு கேள்வித்தாள் அவுட், தேர்வு ரத்து. கியூட் தேர்வு முறையாக நடக்கவில்லை, தேர்வு ரத்து. சிபிஎஸ்இ தேர்விலும் குளறுபடி, விசாரணை நடக்கிறது.

கல்வித் துறையின் மிக முக்கிய பணி முறையாகவும், நேர்மையாகவும் தேர்வு நடத்துவது. ஆனால், தொடர்ந்து தேர்வு நடத்துவதிலேயே தோல்வி அடைந்திருக்கிறது மத்திய அரசின் கல்வித் துறை.

கல்வி அமைச்சகம் துவங்கி அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், மோசடி, பொறுப்பற்ற செயலுக்கு லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால வாழ்வு இருண்டு விட்டது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

P Shanmugam urges Union Education Minister Dharmendra Pradhan to resign


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->