இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்..தமிழக மீனவர்கள் 4 பேர் கைது! - Seithipunal
Seithipunal


 தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை கைது செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்கள் படைகளையும் எடுத்து சென்று விடுகின்றனர்.

 இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மீனவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவிக்கவும்  விதமாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். சமீபகாலமாக  மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு சென்று வருகின்றனர். சமீப காலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து செல்வது அதிகரித்துக் கொண்டே செல்கிறது இந்த நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க  சென்ற ராமேஸ்வரன் மீனவர்களை  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  கூறி 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

ராமநாதபுரம் , மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 4 பேரை கைது செய்தனர். அதோடு மீனவர்களின் விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lankan Navy once again harassed4 fishermen from Tamil Nadu arrested


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->