கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 08 பேருக்கு ஜூலை 08 வரை சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


மீன் பிடி தடைக்காலம் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் முடிவடைந்தது. தற்போது மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. 

கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிய ராமேஸ்வரத்தை சேர்ந்த 08 மீனவர்களை ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த சம்வபம் மீனவர்களிடையே அதிர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 08-ஆம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது 08 மீனவர்களும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lankan court sentences 8 arrested Rameswaram fishermen to jail till July 8


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->