பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செய்திக்குறிப்ப ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

"திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயிலை இயக்குகிறது.

அதன்படி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) காலை 11 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்றுசெல்லும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

special train run to thiruvannamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->