சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. போக்குவரத்து துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல உள்ளனர். இந்த நிலையில் தமிழக பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் வரும் வியாழக்கிழமை முதல் இயக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை - பம்பை - குமுளி அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்து வசதி சேவை 2023 ஜனவரி 18ஆம் தேதி வரை இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special bus service for sabarimalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->