சிறப்பு பேருந்துகள் : ஊர்களுக்கான பேருந்து நிலையங்கள் எவை.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் பேருந்துகளின் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும். 

இந்நிலையில், பொங்கல் பண்டிகையின்போது பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஜனவரி 11,12,13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் எந்த பேருந்து நிலையங்களில் இருந்து எந்த ஊருக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்ற விவரத்தை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. 

மாதவரம் புதிய பேருந்து நிலையம் : 

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திரா மாநிலம் செல்லும் பேருந்துகள்.

கேகே நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் :

ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள். 

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் :

 திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள். 

தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம் : 

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போரூர், சேத்துப்பட்டு, வந்தவாசி ,செஞ்சி வழியாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், செல்லும் பேருந்துகள். 

பூந்தமல்லி பேருந்து நிலையம் :

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள். 

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு :

குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்,  ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151, 044 24749002 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special bus chennai to other districts


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->