பெரம்பலூர் அருகே சோகம்.! மாமனாரின் உடலை அடக்கம் செய்து விட்டு சென்ற மருமகன்.. விபத்தில் பலி.!
Son in law killed in road accident in Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் மாமனாரின் உடலையும் அடக்கம் செய்துவிட்டு சென்றபோது மருமகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காந்தி நகர் பகுதியை சோ்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் அங்கமுத்து(40) பெரம்பலூா் மாவட்ட மின் வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில் அங்கமுத்து நேற்று மாலை தனது மாமனாரின் உடலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்துவிட்டு கை.களத்தூா் பாலம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று அங்கமுத்து மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த அங்கமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Son in law killed in road accident in Perambalur