ஸ்மார்ட் சிட்டி திட்டம்.. பாலம் சீர் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த அனிபால் கென்னடிMLA!  - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கல்வெட்டு பாலம் சீர் அமைக்கும் பணிகளை  உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ அனிபால் கென்னடி ஆய்வு செய்தார். 

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சுப்பையா சாலை பகுதியில், பெரிய வாய்க்கால் மேலே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் NBCC நிறுவனத்தின் மூலம் கல்வெட்டு பாலம் சீர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திமுகவின் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணி முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.

பெரிய வாய்க்கால் வழியாக தண்ணீர் விரைவாக வெளியேற, கல்வெட்டு பாலத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாலம் வேளையை வேகமாகவும் தரமாகவும் செய்து முடிக்க வேண்டும் என்று சட்ட மன்ற உறுப்பினர் ஸ்மார்ட் சிட்டி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் CTO அவர்களை கேட்டு கொண்டார். இந்த நேரத்தில், விசிக தொகுதி செயலாளர் கன்னியப்பன், திமுக தொகுதி துணை செயலாளர் ராஜி, திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நோயல், திமுக மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, திமுக கிளை செயலாளர் ராகேஷ் கழக சகோதரர் செல்லப்பன் ஆகியோர் அவருடன் இருந்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Smart City Project Anibal Kennedy MLA inspected the bridge repair works


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->