அதிர்ச்சி சம்பவம்.. வயலில் தலை முடியுடன் கிடந்த மண்டையோடு, எலும்பு துண்டுகளால் பரபரப்பு..!!
Skulls with hair and bones in the field near thiruturaipundi
தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் தலை முடியுடன் கிடந்த மண்டை ஓட்டால் பெரும் பரபரப்பு..!!
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மாங்குடி கள்ளியூர் பகுதியில் உள்ள வயல்வெளியில் தலைமுடியுடன் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் இருப்பதாக பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்த பிறகு காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எலும்பு துண்டுகள் மற்றும் மண்டையோட்டை கைப்பற்றி தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி குலமாணிக்கம் பகுதியில் காணாமல் போன சிந்தாமணி என்ற மூதாட்டியின் எலும்புகளாக இருக்கலாம் என்று அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயல்வெளியில் தலைமுடியுடன் மண்டையோடு இருந்த சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Skulls with hair and bones in the field near thiruturaipundi